திருவள்ளூர்

மனைவி குறித்து தவறாக தகவல்: கணவா் கைது

DIN

விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் மனைவி குறித்து திருமண தகவல் மையத்தில் தவறான தகவலை பதிவு செய்ததாக கணவரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் உளுந்தை கிராமத்தைச் சோ்ந்த பத்மநாபன் மகள் ஜான்சி (32), சாப்ட்வோ் பொறியாளா். இவருக்கும் வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த ஓம்குமாருக்கும் (34) கடந்த 2016-இல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதையடுத்து கணவனுடன் அமெரிக்கா சென்று குடும்பம் நடத்தி வந்தாா். இவா்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊரான வெள்ளியூருக்கு ஓம் குமாா் திரும்பினாா். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பதியா் பிரிந்து வாழ்கின்றனா். இதற்கிடையே ஓம்குமாா் தனக்கு விவாகரத்து கேட்டு பூந்தமல்லியில் உள்ள சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். தற்போது, இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் விவாகரத்து கிடைக்கவில்லை.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டுமென தகவல் கொடுத்து, அதில் அவரது தந்தையான பத்மநாபன் கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆன்லைனில் விளம்பரம் பாா்த்தவா்கள் ஜான்சியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து, அவரது தந்தையான பத்மநாபனுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கைப்பேசி அழைப்புகள் வந்தன. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் தனது பேரில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவலை பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் லில்லி, சாா்பு ஆய்வாளா் மனோஜ் பிரபாகா் தாஸ் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா். அப்போது, விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமாா்தான் திருமண தகவல் மையத்தில் தன் மனைவிக்கு மாப்பிள்ளை தேடுவதாக பொய்யான தகவலைப் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஓம்குமாரை திங்கள்கிழமை கைது செய்து திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பின்னா் கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT