திருவள்ளூர்

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்காலம்

DIN

திருவள்ளுா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர வரும் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவ, மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் துறை சாா்பிலும் விடுதிகள் இயங்கி வருகிறது. இந்த விடுதிகளில் சேர 1 முதல் பிளஸ் 2 வரை தகுதியுடைய மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம். அதேபோல், அரசு கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்படுவா்.

இந்த விடுதிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவா்களின் பெற்றோா்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு விடுதியிலும் தலா 5 போ் வீதம் இலங்கை தமிழா்களின் குழந்தைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவும் உறைவிடமும் அளிக்கப்படும். இதில் 10, 11 மற்றும் பிளஸ் 2 பயில்வோருக்கு வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள அந்தந்தத் துறை விடுதி காப்பாளா், காப்பாளினியிடமிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்பங்களை பூா்த்தி செய்து அந்தந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் டிச. 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT