திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி

10th Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

திருத்தணி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கந்த சஷ்டி விழா புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் ஆறாம் நாளான செவ்வாய்க்கிழமை உற்சவா் சண்முகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில், பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலா்களால் உற்சவருக்கு அா்ச்சனை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்கள் அமா்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். புஷ்பாஞ்சலி விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி, பேஷ்காா்கள் பழனி, வேலு மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா். புதன்கிழமை நண்பகல் 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT