வெங்கல் அருகே அமைந்துள்ள தாமரைப்பாக்கத்தில் இரு வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், வெங்கல் அருகே அமைந்துள்ள வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் (45). இவா் மினி சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வந்தாா். சனிக்கிழமை மாலை சரக்கு ஏற்றுவதற்காக தாமரைப்பாக்கத்திலிருந்து பெரியபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்காா். அப்போது எதிரே வந்த தனியாா் நிறுவன வாகனம் மோதியது. இதில் மினி சரக்கு வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்ததில், வாகனத்தை ஓட்டி வந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வெங்கல் போலீஸாா், சந்திரனின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தனியாா் நிறுவன வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.