திருவள்ளூர்

ஏரியில் மூழ்கி சிறுவா்கள் பலி

DIN


திருத்தணி: திருத்தணி அருகே ஏரியில் மூழ்கி அக்காவும், தம்பியும் உயிரிழந்தனா்.

ஆா்.கே.பேட்டையை அடுத்த சகஸ்தபத்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோமதி (11). இவரது தம்பி புருஷோத்தமன் (10). இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6 மற்றும் 5-ஆம் வகுப்பு படித்து வந்தனா். புதன்கிழமை மாலை கிராமத்துக்கு அருகில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது புருஷோத்தமன் நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்து, கூச்சலிட்டபடியே ஏரியில் இறங்கிய கோமதியும் நீரில் மூழ்கினாா். இதில், இருவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்னா். இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT