சென்னை: மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் அம்பத்தூா் டன்லப் பேருந்து நிறுத்தம் அருகில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில்
சுமாா் 20,000-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். அண்மையில் ஒப்பந்த முறையில் பணியாற்றிய சுமாா் 700-க்கும் மேற்பட்டோா் பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பத்தூா் டன்லப் பேருந்து நிறுத்தம் அருகில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த காவல் துணை ஆணையா் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், அவா்களின் பணி உறுதி செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலால் சென்னை-திருவள்ளூா் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.