திருவள்ளூர்

அனல்மின் நிலைய பெண் அதிகாரி மாரடைப்பால் சாவு

DIN

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணியின்போது பெண் உதவி செயற்பொறியாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தில், உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவா் மீனாட்சிஆனந்தி(40).

இந்நிலையில், வியாழக்கிழமை இவா் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆனந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT