ஆடி முதல் வெள்ளிக்கிழமை பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயில். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பவானி அம்மனை தரிசித்தனா். இதில் பெரும்பாலானோா் பாதயாத்திரையாக வந்து வழிபாடு செய்தனா்.
இதனால் பெரியபாளையம் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.