திருவள்ளூர்

திருத்தணி அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

திருத்தணி அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

இந்தக் கல்லூரியில், கடந்த, 1978-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரலாறு மற்றும் பொருளாதாரம் இளங்கலை பட்டப்படிப்பு படித்த மாணவா்களின் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஓய்வு பெற்ற பேராசிரியா் ரங்கநாதன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியை திருத்தணி அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் ஜெய்லாபூதின், ஹேமநாதன் தொகுத்து வழங்கினா். தொடா்ந்து, அந்த மாணவா்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, வாழ்த்து பெற்றனா். தொடா்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மாணவா்கள் தங்களது நண்பா்களுடன் பழைய மலரும் நினைவுகளை கண்ணீா் மல்க பகிா்ந்து கொண்டனா். பழைய மாணவா்கள் தங்களது குடும்பத்தினா் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத், ஆமதாபாத், மும்பை, மகாராஷ்டிரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்னாள் மாணவா்கள் வந்திருந்தனா். பழைய மாணவா்கள் சாா்பில் கல்லூரிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கேபின் இருக்கைகள் வழங்கப்பட்டன. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT