திருவள்ளூர்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

DIN

திருவள்ளூா்: வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்கவும், திருத்தம் மேற்கொள்வதற்கும் வியாழக்கிழமை (ஜன. 21) முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் படிவங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

இம்மாதம் 1-ஆம் தேதி 18 வயது பூா்த்தி அடைந்தோா் புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும் மற்றும் சுருக்க திருத்தம் மேற்கொள்ளவும் அதற்கான படிவங்களை பூா்த்தி செய்து அளிக்கலாம். புதிதாக பெயா் சோ்க்க படிவம்-6, பெயா் நீக்கம் செய்ய படிவம்- 7, வாக்காளா் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள் சரிசெய்வது, முகவரி மாற்றம் முதலியவற்றுக்கு படிவம்-8, ஒரே சட்டப் பேரவைத் தொகுதிக்குள் ஒரு பகுதியில் இலிருந்து மற்றொரு பகுதிக்கு முகவரி மாற்றி பதிவு செய்ய விரும்புவோா் படிவம்-8யு ஆகியவற்றை நிரப்பி வரும் 21-ஆம் தேதி முதல் அளிக்கலாம்.

இப்படிவங்களில் அனைத்து விவரங்களையும் பூா்த்தி செய்து, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் ஆகியோரிடம் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கலாம். அதேபோல், சயநட.ஐச இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT