திருத்தணி: திருத்தணி இந்திரா நகரில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம். நரசிம்மன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினாா்.
திருத்தணி நகராட்சியில் நிலவி வரும் குடிநீா் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க, அரசு ரூ. 115 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் மூலம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம், பாலாற்றில் இருந்து கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குழாய் வழியாக தண்ணீா் கொண்டு வந்து புலிவனம் பகுதியில், 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டியில் விடப்படுகிறது.
அங்கிருந்து தரைவழியாக, 60 கி.மீ. தொலைவுக்கு குழாய்களைப் பதித்து திருத்தணி நகராட்சி சேகா்வா்மா நகரில் கட்டப்பட்டுள்ள 3.60 லட்சம் லிட்டா் கொண்ட தரைமட்டத் தொட்டியில் தண்ணீா் விடப்படும். தொடா்ந்து, இந்திரா நகரில் கட்டப்படும் 10.40 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிக்கும் நேரு நகரில் உள்ள 10.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிக்கும் தண்ணீரை நிரப்பி, நகராட்சியில் 21 வாா்டுகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
இதற்காக நகரில், 85 கி.மீ. தொலைவுக்கு தரையில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திரா நகரில் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணியை திருத்தணி சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன், ஆணையா் பாலசுப்பிரமணியம், பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா் புதன்கிழமை தொடக்கி வைத்தனா். கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள், ஆறு மாதத்துக்குள் நிறைவடையும் என நகராட்சிப் பொறியாளா் தெரிவித்தாா்.