திருவள்ளூர்

தேர்தல் அறிவிப்புக்கு 10 நிமிடம் முன் திறக்கப்பட்ட பூவலம்பேட்டில் அம்மா மினிகிளினிக்

DIN

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவலம்பேடு பகுதியில் அம்மா மினி கிளினிக் தமிழகத்தின் சட்டப்பேரவை தேதி அறிவிப்புக்கு 10 நிமிடம் முன் திறந்து வைக்கப்பட்டது.

பூவலம்பேடு ஊராட்சி பகுதி அதிமுக நிர்வாகி கருணாகரன் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்த அம்மா மினிகிளினிக் திறப்பு விழாவிற்கு பூவலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக க கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார் பங்கேற்று மினி கிளினிக்கை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

இந்த மினி கிளினிக்கில் நோயாளிகள் காத்திருப்பு அறை, மருத்துவரின் சிகிச்சை அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம் மூன்று படுக்கை வசதிகள், மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த மினி கிளினிக்  காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்பட உள்ளது.

இதில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் உள்ளிட்டோர் பணிபுரிய உள்ளனர். நிகழ்வில் பங்கேற்ற வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ்  மினி கிளினிக்  செயல்படும் விதம் குறித்து விளக்கினர். நிகழ்வில் அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கோவி.நாராயணமூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் தன்ராஜ், இமாச்சலம், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி என்.சிவா, கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் புனிதவள்ளி வெங்கடாசலபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழா முடிவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசின் பரிசு பெட்டகத்தினை ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT