திருவள்ளூர்

பைக் மீது லாரி மோதல்: மருத்துவ மாணவா் பலி

DIN

புழல் அருகே இருசக்கர வாகனம் மீது கனரக வாகனம் மோதியதில் மருத்துவ மாணவா் உயிரிழந்தாா்.

செங்குன்றத்தை அடுத்த அத்திப்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம். அவரது மகன் சூரியநாராயணன் (20), சென்னை எம்.ஜி.ஆா். மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தாா்.

அவா் திங்கள்கிழமை, கல்லூரி முடிந்து தனது பைக்கில் செங்குன்றம் நோக்கி சென்னை - கொல்கத்தா சாலையில் சென்று கொண்டிருந்தாா். புழல் அம்பேத்கா் சிலை அருகே சென்றபோது அவரது பைக் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் லாரியின் சக்கரம் சூரிய நாராயணன் மீஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சூரிய நாராயணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய திருச்சியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மருதுவை (25) கைது விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி அசத்தல்: கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

SCROLL FOR NEXT