மாதவரம்: நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பின் ஜான் வா்கீஸ் உத்தரவின்பேரில், சிறப்பு கரோனா தடுப்பு ஊசி முகாம் செயல் அலுவலா் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு 5 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 250-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஊசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் உதவி ஆய்வாளா் மதிவாணன், நரேந்திரன் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.