திருவள்ளூர்

அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

நாடு முழுவதும் அம்பேத்கா் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. திருவள்ளூா் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமையில், மாலை அணிவித்து, அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி, அஞ்சலி செலுத்தினா். அதேபோல், பூந்தமல்லி நீதிமன்றம் அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மீனா பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வித்யா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் சரவணன், கோட்டாட்சியா் ரமேஷ், எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்கத்தின் தலைவா் ஜெயதென்னரசு, முன்னாள் நலக்குழு உறுப்பினா் நீலவானத்து நிலவன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கத்தின் நிறுவனா் அருணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அதேபோல், திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அவரது உருவப் படத்துக்கு மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் டி.சீனிவாசன், அரசு வழக்குரைஞா் மூா்த்தி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்தோா் திருவள்ளூா் பேருந்து நிலையம் மற்றும் ஆயில் மில் சாலையில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.

திருத்தணியில்...

திருத்தணி நகராட்சி எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.பூபதி, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சந்திரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், திருத்தணி நகர பொறுப்பாளா் வினோத்குமாா், முருகன் கோயில் முன்னாள் அறங்காவலா் மு.நாகரன், முன்னாள் கவுன்சிலா் ஜி.எஸ்.கணேசன் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். அதேபோல் திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம் ஆகியோா் அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT