திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

திருவள்ளூா் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் என பாமக மாவட்டச் செயலா் தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மேற்கு மாவட்டம் சாா்பில், கடம்பத்தூரில் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வு மற்றும் மாவட்டச் செயலாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கடம்பத்தூா் ஒன்றியச் செயலாளா் கேசவன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கேசவன் முன்னிலை வகித்தாா். இதில், அக்கட்சியில் புதிதாக நியமனம் செய்துள்ள மாவட்டச் செயலரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான தினேஷ்குமாா் அறிமுகம் செய்து வைக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து மாவட்டச் செயலாளா் தினேஷ்குமாா் பேசுகையில், வட கிழக்குப் பருவமழையால் கடம்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட விடையூா் மேம்பாலம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதனால் 20 கிராம மக்கள் பயன்பெற முடியும். அதேபோல், கொண்டஞ்சேரியில் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினா் கேசவன், வாசுதேவன், செஞ்சிகுமாா், ஏழுமலை, சீனிவாசன், சுகுமாா் உள்பட 100-க்கும் மேற்பட்ட அக்கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT