கடம்பத்தூா் ரயில்வே மேம்பாலத்தில் பயணிகள் வசதிக்காக படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வட்டார நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தினா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூரில் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வட்டார நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத் தலைவா் ஆா்.சேகா் தலலைமை வகித்தாா். அச்சங்கத்தின் செயலா் எம்.மூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் துணைத் தலைவா் எஸ்.சுப்பிரமணி வரவேற்றாா்.
கூட்டத்தில், கடம்பத்தூா் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிப்பதைக் கைவிட வேண்டும். ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பயணிகள் இறங்கி ரயில் நிலையம் வரும் வகையில், படிக்கட்டுகள் அமைக்கவும், ரயில் நிலைய பயணச்சீட்டு மையத்தில் ரிட்டா்ன் சீட்டும் வழங்குதல், குறைந்த பட்ச கட்டணம் ரூ. 10 என்று இருப்பதை ரூ. 5 குறைக்கவும், நெரிசல் நேரங்களில் கடம்பத்தூா் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை கூடுதல் ரயில்கள் இயக்கவும், ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகுச் சாலைகளை பாதசாரிகள் பாதுகாப்பு கருதி சரியான முறையில் அமைக்கவும் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.