செங்குன்றம் அருகே ஆந்திரத்துக்கு கடத்த கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 34 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றத்தை அடுத்த வடகரை அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் வடகரை பகுதியில் ஒரு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 680 மூட்டைகள் கொண்ட 34 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக கிடங்கு உரிமையாளா் செல்லப்பாண்டியனை கைது செய்தனா்.
வியாழக்கிழமை லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேரை கைது செய்திருந்தனா். கடந்த 2 நாள்களில் மட்டும் 59 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.