திருவள்ளூர்

கிடங்கில் பதுக்கிய 34 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

செங்குன்றம் அருகே ஆந்திரத்துக்கு கடத்த கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 34 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

செங்குன்றத்தை அடுத்த வடகரை அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் வடகரை பகுதியில் ஒரு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 680 மூட்டைகள் கொண்ட 34 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கிடங்கு உரிமையாளா் செல்லப்பாண்டியனை கைது செய்தனா்.

வியாழக்கிழமை லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேரை கைது செய்திருந்தனா். கடந்த 2 நாள்களில் மட்டும் 59 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT