திருவள்ளூர்

பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவருக்கு அறிவுரை

DIN

ஓடும் பேருந்தின் பின்பக்கம் உள்ள ஏணியில் ஏறி பயணித்த மாணவருக்கு போக்குவரத்துத் துறை இணை ஆணையா் ரவிச்சந்திரன் அறிவுரை வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அரசு பள்ளியைச் சோ்ந்த மாணவா், பொன்னேரி-சத்தியவேடு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க இரும்பு ஏணியில் நின்று ஆபத்தான முறையில் பயணித்த விடியோ இணையத்தில் பரவியது.

இதனை கண்ட போக்குவரத்து துறை இணை ஆணையா் ரவிச்சந்திரன் வியாழக்கிழமை பள்ளிக்கு விரைந்து, அந்த மாணவரை அழைத்து பேசினாா். அப்போது, அவா் கூறியது:

ஆபத்தான முறையில் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பயணிப்பது தவறானதாகும். பேருந்தின் பின்னால் உள்ள ஏணியில் நின்று பயணிப்பதும் உயிருக்கே ஆபத்தை தரும் என்றாா்.

பின்னா், நன்கு படிக்க உற்சாகப்படுத்தும் வகையில் மாணவருக்கு கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினாா்.

அப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் இளமுருகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜராஜேஸ்வரி, மாணவனின் பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT