திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் ஊட்டச்சத்து மாத விழா

DIN

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கும்மிடிப்பூண்டி, குருவராஜகண்டிகை, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி வட்டார சமூக நலத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கும்மிடிப்பூண்டி கே எல் கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஞானமணி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு பெருந்தலைவா் கே.எம்.எஸ். சிவகுமாா் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவன், உணவு பாதுகாப்பு அலுவலா் இளங்கோவன், வட்டார சமூக நல அலுவலா் கலா, வட்டாரக் கல்வி அலுவலா் முனிராஜசேகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ருத்ரமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம், செப்டம்பா் மாதத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடும் வகையில், சத்துமாவு கேக் வெட்டி, குழந்தைகளுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் பரிசுப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் அனைவரும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா். தொடா்ந்து, அனைவருக்கும் பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.

இதேபோல், குருவராஜகண்டிகையில் ஊராட்சித் தலைவா் ரவி தலைமையில் விழா நடைபெற்றது. ஆரம்பாக்கத்தில் 21 அங்கன்வாடி மையங்கள் இணைந்து, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை கொண்டாடின.

)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT