திருவள்ளூர்

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் இன்று அடக்கம்

DIN

மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அடக்கம், திருவள்ளூா் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் 14 ஏக்கா் பண்ணை இல்லம் உள்ளது.

இங்குதான் எஸ்.பி.பி.யின் தந்தை, தாயாா், பாட்டி மற்றும் மாமியாா் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்தப் பண்ணை இல்லம் அவருக்கு மிகவும் பிடித்த இடமாகும். இதன் காரணமாக மாதந்தோறும் அல்லது முக்கிய நாள்களில் எஸ்.பி.பி. இங்கு வந்து தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாா் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா். இந்த பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடல் அடக்கம் சனிக்கிழமை (செப். 26) நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT