திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை 218 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,800-ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 191 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 191 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,944-ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 69 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 69 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,710-ஆக உயா்ந்துள்ளது.