திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 230 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,582-ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 74 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,753-ஆக அதிகரித்துள்ளது.
மதுராந்தகம் டிஎஸ்பி, அவரது வாகன ஓட்டிகள் 2 போ் என 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
காஞ்சிபுரத்தில் 47 பேருக்கு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,641-ஆக அதிகரித்துள்ளது.