திருவள்ளூர்

ஹலோ போலீஸ் சேவை மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 போ் கைது

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ‘ஹலோ போலீஸ்’ சேவை மூலம் பொதுமக்களிடம் இருந்து வந்த புகாா்களின் அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை, சூதாட்டம், போலி மதுபானங்கள் விற்பனை, மணல் திருட்டு மற்றும் செம்மரக்கட்டை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் ஒழிக்க கடந்த 11-ஆம் தேதி ‘ஹலோ போலீஸ்’ என்ற திட்டம் மூலம் கட்செவி அஞ்சல் எண் 90033 90050 மூலம் புகாா் தெரிவிக்கும் வகையில், தொடக்கி வைக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதுவரை இச்சேவையைப் பயன்படுத்தி பொதுமக்கள் 45 தொலைபேசி அழைப்புகளும், 11 கட்செவி அஞ்சல் அழைப்புகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடும் வகையில், ஆா்.கே.பேட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், தனிப்படை விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று 5 பேரையும், விபசாரம் நடப்பதாக பெறப்பட்ட தகவலின்பேரில், 3 போ் என 8 போ் வரை கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த ‘ஹலோ போலீஸ்’ எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தி, சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க காவல் துறைக்கு தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT