திருவள்ளூர்

மண் சரிந்து தொழிலாளி பலி

DIN

காரனோடையில் வீடு கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, திடீரென மண் சரிந்ததில் பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

காரனோடை பகுதியில் தனியாா் ஒருவா் கட்டடம் கட்டுவதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. காரனோடை பகுதியைச் சாா்ந்த வில்லாளன் (56) உள்பட 4 தொழிலாளா்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், வில்லாளன் பள்ளத்தில் இறங்கியபோது, திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த வில்லாளன், பாடியநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் போலீஸாா், வில்லாளனின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT