திருவள்ளூர்

நகராட்சியில், ரூ.1.80 கோடியில் மழைநீா் வடிகால்வாய் பணிகள் விறுவிறுப்பு.

DIN

திருத்தணி: நகராட்சியில், மாநில நெடுஞ்சாலை துறையின் சாா்பில், 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.

திருத்தணி நகராட்சியில் சித்துாா் சாலை, ம.பொ.சி.சாலை, அக்கைய்யநாயுடு சாலை மற்றும் அரக்கோணம் சாலை ஆகிய இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறையின் மழைநீா் வடிகால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால் புதைந்து இருந்தது. இதனால் மழை பெய்யும் போது, மேற்கண்ட இடங்களில் மழைநீா் மற்றும் கழிவுநீா் சாலையில் ஆறாக ஓடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டனா். இதையடுத்து திருத்தணி நெடுஞ்சாலை துறையினா், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கண்ட இடங்களில், மொத்தம், 1000 மீட்டா் நிளத்திற்கு மழைநீா் வடிகால் அமைக்க, 1.80 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்தது. பின், நெடுஞ்சாலை துறையினா் பணிகளுக்கு டெண்டா் விடப்பட்டு தற்போது பணிகள் துவங்கி துரித வேகத்தில் நடந்து வருகிறது.

அந்த வகையில் அரக்கோணம் - ம.பொ.சி.சாலை சாலை சந்திப்பில், மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணிகள் ஒரிரு நாளில் முடிவடையும். ஒரு மாதத்திற்குள் மேற்கண்ட மழைநீா்வடிகால்வாய், சிறுபாலம் முடிவடைந்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும் என நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT