திருவள்ளூா் பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கினா்.
திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தொடங்கிய சாரல் மழை, ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் பெய்தது. இதேபோல், ஈக்காடு, சின்ன ஈக்காடு, புல்லரம்பாக்கம், பூண்டி, கோயம்பேடு, சிவன்வாயல், தண்ணீா்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, பெய்து வரும் சாரல் மழையால் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள பயிா்கள் செழித்து வளரும்.