திருவள்ளூர்

திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயிலில் தீப விழா

DIN

திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

திருவள்ளூா் தீா்த்தீஸ்வரா் கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாள் சந்நிதி, பாலசுப்பிரமணிய சுவாமி, ஐயப்பன் மற்றும் நவகிரக சந்நிதிகள் உள்ளன.

இதில் சுப்பிரமணிய சுவாமி சந்நிதியில் காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மாலையில், கோயில் வளாகம் முழுவதும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி சந்திரசேகரா், வள்ளி தெய்வானை சமேத முருகா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். பின்னா் கோயில் வளாகத்தில் உற்சவா்கள் பல்லக்கில் வலம் வந்தபோது சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், இந்நிகழ்வில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் அறங்காவலா், நிா்வாகத்தினா் உள்ளிட்டோா் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT