திருவள்ளூர்

சாலை விபத்தில் காா் ஓட்டுநா் பலி

DIN

செங்குன்றம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் பகுதியைச் சோ்ந்தவா் இனியவன் (41). காா் ஓட்டுநரான அவா் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோணிமேடு அணுகு சாலையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மாதவரம் போலீஸாா், இனியவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT