திருவள்ளூர் அருகே இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய பெண்ணை மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவான 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ்(36). இவர் கடந்த 24-ஆம் தேதி சராமரியாக படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வந்தனர்.
மேலும், இந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டறியும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன், துணைக்காவல் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இதில் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாவின் மனைவி சத்யதேவி என்ற பெண்ணை ராஜா என்பவர் ஆள்கள் இல்லாத நேரத்தில் கதவு தட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவும் செய்ததாகவும் தகவல் தெரியவந்தது.
இதையடுத்து மேலும், விசாரணையில் சத்யதேவி தூண்டுதலின் பேரில் அவரது கணவர் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து ராஜா கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் காரணமான சத்யதேவியை மப்பேடு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து கொலைச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சத்யதேவி கணவர் ராஜா உள்ளிட்டோர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.