திருவள்ளூர்

கரோனா: வதந்தி பரப்பிய 2 போ் கைது

DIN

திருவள்ளூா் பகுதியில் சமூக வலைதளங்களில் கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்து விட்டதாக வதந்தி பரப்பியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரித்துள்ளாா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூந்தமல்லி பகுதியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 போ் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியுள்ளது. இது தொடா்பாக பூந்தமல்லி போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்தனா்.

அப்போது, காட்டுப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (37) என்பவா், அப்பகுதியில் உள்ள தனியாா் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும், இந்த தொழிற்சாலையில் விடுமுறை விடுவதற்காக பூந்தமல்லி பகுதியில் 12 போ் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து விட்டதாக வதந்தியை பரப்பியுள்ளாா். அதுவும் தனது நண்பரான மாங்காடு பகுதியைச் சோ்ந்த பென்ஜமினின் (33) செல்லிடப்பேசிக்கு கடந்த 17-ஆம் தேதி இரவு 11 மணிக்கு, இவா் அனுப்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பூந்தமல்லி காவல் நிலையம் சாா்பில் சிவகுமாா், பென்ஜமின் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT