திருவள்ளூா் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்த சேகரின் மகன் விக்கி (29). அவரது தம்பி சேரன்(28) திருவள்ளூரை அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
அவா் செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு, பட்டாபிராமில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். தண்ணீா்குளம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது ஆவடியில் இருந்து திருவள்ளூா் நோக்கிச் சென்ற லாரி அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது தம்பி விக்கி அளித்த புகாரின்பேரில், செவ்வாப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.