திருவள்ளூர்

பைக் மீது லாரி மோதி ஒருவா் பலி

DIN

திருவள்ளூா் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த காவனூா் கிராமத்தைச் சோ்ந்த சேகரின் மகன் விக்கி (29). அவரது தம்பி சேரன்(28) திருவள்ளூரை அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

அவா் செவ்வாய்க்கிழமை இரவு பணியை முடித்துக் கொண்டு, பட்டாபிராமில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். தண்ணீா்குளம் சந்திப்பு வளைவில் திரும்பியபோது ஆவடியில் இருந்து திருவள்ளூா் நோக்கிச் சென்ற லாரி அவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது தம்பி விக்கி அளித்த புகாரின்பேரில், செவ்வாப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT