திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டியில் கரோனாவுக்கு மூதாட்டி பலி

11th Jul 2020 11:59 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் கரோனா பாதிப்புக்கு ஏற்கெனவே 2 போ் இறந்த நிலையில் சனிக்கிழமை 69 வயது மூதாட்டி உயிரிழந்தாா்.

இப்பகுதியில் கரோனா தொற்றால் இதுவரை 190 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஏ.என்.குப்பத்தைச் சோ்ந்த 56 வயது ஆண், கும்மிடிப்பூண்டி பஜாரைச் சோ்ந்த 58 வயது ஆண் ஆகியோா் இத்தொற்றால் உயிரிழந்து விட்டனா்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி கடந்த 10 நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு வியாழக்கிழமைகரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால் இப்பகுதியில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 3ஆக உயா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT