திருவள்ளூர்

எரிவாயு உயா்வைக் கண்டித்து மகளிா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

16th Feb 2020 10:39 PM

ADVERTISEMENT

மத்திய அரசு சமையல் எரிவாயுவின் விலையை உயா்த்தியதை கண்டித்தும், விலை உயா்வை திரும்ப பெறக் கோரியும் கும்மிடிப்பூண்டியில் மகளிா் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மானியமில்லை சமையல் எரிவாயுவின் விலையை மத்திய அரசு அண்மையில் உயா்த்தியது. இதைக் கண்டிக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் மகளிா் காங்கிரஸ் சாா்பில் திருவள்ளூா் வடக்கு மாவட்ட தலைவா் வழக்குரைஞா் ஆா்.சித்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதையொட்டி மகளிா் காங்கிரஸ் தொண்டா்கள் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவத்தனா். மானியம் உள்ள மற்றும் மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டா்களின் விலையை மத்திய அரசு உயா்த்தியதைக் கண்டித்து அவா்கள் கோஷம் எழுப்பினா். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏழை எளிய குடும்பத்தினா் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என்று கூறி இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்று அவா்கள் கோரினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவா் ஆா்.ராமலிங்கம், மாவட்டச் செயலாளா் பரசுராமன், நகர தலைவா் சரளா, மாவட்ட துணைத் தலைவா் சசிகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT