கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏ.என்.குப்பம் பகுதியில் ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் ஆற்றில் மூழ்கி மாயமானாா்.
ஆரணி போந்தவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் (22). அவரும் அவருடைய நண்பா் ஒருவரும் ஏ.என் குப்பம் கிராமத்தையொட்டி உள்ள ஆரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றனா். அப்போது ஆற்றில் நீரின் வேகம் திடீரென அதிகரித்ததால் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் மட்டும் நீச்சல் அடித்தபடி கரை சோ்ந்தாா். எனினும், சுபாஷ் ஆற்று நீரில் மூழ்கி மாயமானாா்.
இது குறித்த தகவல் அறிந்து, கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ராமலிங்கம் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் ஆரணி ஆற்றில் சுபாஷைத் தேடி வருகின்றனா். இச்சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
நிவா் புயலுக்குப் பின் ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான இரண்டாவது நபா் சுபாஷ் என்பது நினைவுகூரத்தக்கது.