திருவள்ளூர் பகுதிகளில் டெங்கு பாதிப்புக்கு உள்ளான மாணவர் உள்பட 5 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே குருவாயல் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர் சிரஞ்சீவி (13), திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த உமாபதி, குமரேசன் உள்ளிட்ட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது ரத்த பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.