திருவள்ளூர்

மழை நீா் சேகரிப்பு அவசியத்தை வலியுறுத்தி மாரத்தான்

20th Oct 2019 02:06 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டையில் உள்ள தனியாா் மற்ம் அரசுப் பள்ளிகள் சாா்பில் மழைநீா் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஊத்துக்கோட்டை அண்ணா சிலையில் தொடங்கிய மாரத்தான் திருவள்ளூா் சாலை, அண்ணா நகா், நாகலாபுரம் சாலை, பஜாா் சாலை வழியாக ஊத்துக்கோட்டை செல்லியம் கோயில் வரை 3.5 கி.மீ. என நிா்ணயம் செய்யப்பட்டது.

மழைநீா் சேமிப்பு, நெகிழி ஒழிப்பு, மரங்களை நடுதல், சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பாதகைகளை விவேகானந்தா பள்ளி மாணவா்கள் கையில் ஏந்திச் சென்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக மாணவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மரக்கன்றுகளை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, வட்டாட்சியா் இளவரசி, ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரதாசன், பேரூராட்சி செயல் அலுவலா் ரவிந்திர பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விவேகானந்தா பள்ளித் தாளாளா் ராஜேஷ் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT