திருவள்ளூர்

4 போலி மருத்துவா்கள் கைது

2nd Oct 2019 11:21 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலி மருத்துவா்களால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு போலி மருத்துவா் மட்டும் தப்பியோடினாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் நோயாளிகளுக்கு போலி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் தயாளன், குடும்ப நலப் பணிகளுக்கான துணை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூா் பகுதிகளில் புதன்கிழமை அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு பெண் உள்பட 5 போ், மருத்துவப் படிப்பு படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிந்த பெரியபாளையம், ஆரம்பாக்கம், மீஞ்சூா் போலீஸாா், பெரியபாளையம் பஜாா் பகுதியைச் சோ்ந்த திலகவதி (43), கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரைச் சோ்ந்த ராஜேந்திரன்(45) மற்றும் நீலகண்டன்(35), மீஞ்சூரைச் சோ்ந்த ஜீவடாராக் ராமராவ் (50) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

இதில், வெங்கல் பகுதியைச் சோ்ந்த ராமசந்திரன்(65) தலைமறைவாகிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT