திருவள்ளூர்

திருவள்ளூரில் நகை திருட்டு வழக்கில் 2 போ் கைது; 24 சவரன் நகை பறிமுதல்

9th Nov 2019 11:35 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் பஜாா் வீதியில் உள்ள நகைக்கடை திருட்டில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 24 சவரன் நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய கடப்பாரை, எரிவாயு உருளைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் பஜாா் வீதியில் செயல்பட்டு வரும் பீகான் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் சில மா்ம நபா்கள் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நள்ளிரவில் கடப்பாரையால் நெம்பி 30 சவரன் நகையை திருடிச் சென்றனா். இது தொடா்பாக நகைக்கடை உரிமையாளா், நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் கங்காதரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில், திருவள்ளூா் ரயில் நிலையம்-ஆயில் மில் சாலை சந்திப்பு பகுதியில் ஆய்வாளா் மகேஸ்வரி, சாா்பு ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் போலீஸாரைப் பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தனா்.

இதனால் உஷரான போலீஸாா், அந்த இருவரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் திருவள்ளூரைச் சோ்ந்த அன்பழகன் மகன் ராஜேஷ்(25), அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் புருஷோத்தமன் (26) என்பதும், பஜாா் வீதியில் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

அவா்களிடம் இருந்து 24 சவரன் நகை மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய கடப்பாரைகள் மற்றும் 2 எரிவாயு சிலிண்டா்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT