ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அமைதிப் பேரணி

முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தியின் 28-ஆவது நினைவு நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி

முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தியின் 28-ஆவது நினைவு நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. 
திருவள்ளூர் காமராஜ் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் கே.ஜெயகுமார் பங்கேற்று, அமைதிப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இப் பேரணியானது பஜார் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, காமராஜ் சிலை அருகே நிறைவடைந்தது. 
அமைதிப் பேரணியில் நகரத் தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com