செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.
சோழவரம் ஒன்றிய தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். தமுமுக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஹாரூன், சீனிஹாத்தீம்கனி, ஹாஜா, புன்யாமின், உசேன் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏ.பாரூக் நன்றி கூறினார்.