அதிகாரியை கைது செய்யக்கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. அதற்கான கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்காமல் காலதாமதம் செய்வதாகவும்,  இதில் தொடர்புடைய வட்டாட்சியரை கைது செய்யக்கோரியும், வழக்குரைஞர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். வழக்குரைஞர்களை போலீஸார் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
 பின்னர், வழக்குரைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராம்குமார், ராஜன் ஆகியோர் சார்பில், ஆட்சியரிடம் அளித்த மனு:
தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக சென்னை முதல் அலமேலுமங்காபுரம் வரையில் பல்வேறு கிராமங்களில் இருந்து நில ஆர்ஜிதம் செய்தனர். 
அப்போது குறைந்த அளவிலேயே விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. அதனால் கூடுதல் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தோம். அதன் பேரில், கூடுதலாக இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. 
இந்த உத்தரவை கடந்த 2 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருப்பதால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வழக்குரைஞர்களுடன் வரும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல், வழக்குரைஞர்கள் பற்றி தரக்குறைவாகவும் பேசியும் வருகிறார். 
இது தொடர்பாக திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தோம். ஆனால், கடந்த 3 மாதங்களாக உயர் அதிகாரியாக இருப்பதால் எவ்வித விசாரணையும் செய்யாமல் போலீஸார் காலதாமதம் செய்து வருகின்றனர். அதனால், வட்டாட்சியர் மீது விசாரணை செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 
உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.             

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com