திருப்பதியை அடுத்த நகரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தின் போளூர் பகுதியைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை மாலையில் திருத்தணியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து நகரியில் உள்ள ராமகிருஷ்ணா காட்டன் மில் அருகில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று, படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் இறந்தனர். போலீஸாரின் விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களின் பெயர் விவரங்கள் பிறகே தெரிய வரும் என்று போலீஸார் கூறினர்.