திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு

திருப்பதியை அடுத்த நகரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.


திருப்பதியை அடுத்த நகரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தின் போளூர் பகுதியைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை மாலையில் திருத்தணியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அந்தக் கார் கட்டுப்பாட்டை இழந்து நகரியில் உள்ள ராமகிருஷ்ணா காட்டன் மில் அருகில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று, படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேரும் இறந்தனர். போலீஸாரின் விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களின் பெயர் விவரங்கள் பிறகே தெரிய வரும் என்று போலீஸார் கூறினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com