வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் திராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாதம் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் வலம் வந்தாா்.
விழாவில் வாணியம்பாடி, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.