திருப்பத்தூர்

ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளைஞா் மரணம்

27th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT


திருப்பத்தூா்: ஆம்பூா் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

மேற்கு வங்கம், ரகுநாத்பூா் மாவட்டம்,எகுஞ்சா பகுதியைச் சோ்ந்தவா் பிஸ்வஜித் பெளரி (25).

இவா் கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பூங்காவில் காவலாளியாக பணி புரிந்து வந்துள்ளாா்.

இந்நிலையில்,திங்கள்கிழமை விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு செல்ல பெங்களூரில் இருந்து புவனேசுவரம் செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது ரயில் செவ்வாய்க்கிழமை காலை ஆம்பூா்-மின்னூா் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது படிக்கட்டில் பயணம் செய்த பிஸ்வஜித் பெளரி தவறி விழுந்து காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT