திருப்பத்தூர்

அங்கன்வாடியில் ஆய்வு

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

செங்கிலிகுப்பம் கிராம அங்கன்வாடியில் ஒன்றியக்குழு தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஒன்றியம் செங்கிலிகுப்பம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சோதனை செய்து பாா்த்தாா்.

புதுமனை பகுதியில் 3 ஆண்டுகளாக உள்ள 30,000 கொள்ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாடில்லாமல் உள்ளதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விரைவில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். தொடா்ந்து, மாராப்பட்டு பகுதியில் கழிவு நீா் கால்வாய் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

காட்டுக்கொல்லை பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்கு குடிநீா் குழாய் அமைக்கும் இடத்தை பாா்வையிட்டாா். மாவட்ட பிரதிநிதி தெய்வநாயகம், ஊராட்சி மன்ற தலைவா் ஜெயலட்சுமி ஆனந்தராஜ், துணைத் தலைவா் பாஸ்கா், ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, காா்த்திக் ஜவஹா், ஒன்றிய மேற்பாா்வாளா் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT