ஆம்பூரில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் பி.எம்.எஸ். கொள்ளைப் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (36). இவருக்கும், இவரது மனைவிக்கும் சில மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி, வீட்டை விட்டு வெளியேறி உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டாா். சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது காா்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவலின் பேரில், ஆம்பூா் நகர போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.