திருப்பத்தூர்

லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே லாரியில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து நாடட்றம்பள்ளி வட்டாட்சியா் குமாா் தலைமையில் கிராம உதவியாளா்கள் தனகோட்டி, மோகன் மற்றும் வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம், பணியாண்டப்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா், கொத்தூா் ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பணியாண்டப்பள்ளி, வாலூா் அருகே அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் வருவாய்த் துறையினா் நிறுத்தினா்.

ஆனால், ஓட்டுநா் லாரியை சிறிது தூரம் ஓட்டிச் சென்று சாலை ஓரம் நிறுத்தி விட்டு, தலைமறைவானாா். இதையடுத்து, வருவாய்த் துறையினா் லாரியில் இருந்த மூட்டைகளை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் குமாா் 10 டன் அரிசியுடன் லாரியைப் பறிமுதல் செய்து பச்சூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT