திருப்பத்தூர்

கோட்டை பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

DIN

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 6 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை அன்ன வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. அதையடுத்து கண்ணாடி அறை சேவை, திவ்யபிரபந்த சேவை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை சுவாமிக்கு ஆா்ஜித திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT