ஆம்பூா் அருகே முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் சுயம்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைப் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் பாலாலய பூஜையில் பங்கேற்றனா்.